நீ
என்
வெட்க அளவி!
*** *** ***
உன்
கவிதை மறைவில்
ஓய்வெடுக்கிறேன்!
*** *** ***
அவ்வப்போது
என் கை விரல்களும்
உன் சட்டைப் பொத்தான்களாய்!
*** *** ***
நீ
ஆர்ப்பரிக்கும்
கரை!
*** *** ***
உதிர்த்தப் பின்தான்
தெரிந்தது
என் வெட்கத்தின் பெயர்
நீயென்று!
-கலைலலிதா